Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தொடர் விடுமுறை எதிரொலி – சமயபுரத்தில் குவியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் சன்னதிகளின் முதன்மையாக கருதப்படும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து நேர்த்தி கடன் செலுத்தவும் வழிபாடு செய்யவும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் சமயபுரத்தில் மக்கள் கூட்டத்தால் பல்வேறு பகுதிகளும் நிரம்பி வழிகிறது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் இன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை மற்றும் தொடர் விடுமுறை என்பதாலும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

மேலும் நூறு ரூபாய் கட்டணம் தரிசனத்தில் சாமி பார்ப்பதற்கு மூன்று மணி நேரம் ஆகிறது. இலவச தரிசனத்தில் சாமி தரிசன மேற்கொள்ள 5 மணி நேரம் ஆவதாக பக்தர்கள் கூறுகின்றனர். தீபாவளி தொடர் விடுமுறை முன்னிட்டு மக்கள் கூட்டத்தால் சமயபுரம் கோவிலில் பல மணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *