ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து இவர் ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனர். சற்று நேரத்துக்கு முன்னதாக ஸ்ரீரங்கம் கனரா வங்கியில் இருந்து ரூ2.5 லட்சம் பணம் எடுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே நடந்து வந்த பொழுது வழிப்பறிக் கொள்ளையர்கள் இவரிடமிருந்து பையுடன் பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டனர். தற்போது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் இது இரண்டாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO




Comments