Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கொலை மற்றும் வழி பறியில் ஈடுபட்ட மூவரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம்

திருவெறும்பூர் அருகே கொலை வழக்கு மற்றும் வழி பறி வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் என 3 பேரை திருச்சி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் திருவெறும்பூர் நவல்பட்டு பர்மா காலனி சேர்ந்த ஜெயந்தி ஹோட்டல் உரிமையாளர் குமார் (எ)செல்வகுமார் (55) என்பவர் முதல் குற்றவாளி ஆவார் இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி முதல் வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டும் தலைமறைவாகி உள்ளார்.

இதனால் அவரை திருச்சி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.அதேபோல் நவல்பட்டு பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த வழிபறி வழக்கில் நவல்பட்டு அண்ணா நகர் பகுதி இரண்டை சேர்ந்த அந்தோணி ஜேம்ஸ் (57), சுதாகர் ( 42 ) ஆகிய இருவரும் குற்றவாளிகள் அவர்கள் இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதிக்கு பிறகு வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நிலையில் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தும் அவர்கள்

தலைமறைவாக உள்ளனர். இதனால் அவர்கள் இரண்டு பேரையும் தேடப்படும் குற்றவாளியாக திருச்சி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

 

 

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *