Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை!

திருச்சி காந்திமார்க்கெட் அருகே பெரியகடைவீதியில் உள்ள சின்னக்கம்மாளத் தெருவில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஏற்கனவே தங்க கடத்தலில் கேரளாவை சேர்ந்த ஸ்வப்னா வழக்கில் திருச்சியில் என்.ஐ.ஏ விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கஸ்டம்ஸ் அதிகாரிகளும் திருச்சியில் சோதனைகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

நகைக்கடைகள் மற்றும் நகை பட்டறைகள் நிறைய உள்ள இப்பகுதியில் அதிகாரிகள் தொடர்ந்து 3 நாளாக வந்து சென்றனர். இத்தெருவில் உள்ள சிவாஜி என்பவரது தங்கம் உருக்கும் திராவக பட்டறைக்கு இன்று காலையில் சென்ற அதிகாரிகள், கடந்த ஒருமணி நேரத்திற்கும் மேலாக திராவக பட்டறையினுள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *