Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் குடிநீர் கட்!

திருச்சியில் சாலை விரிவாக்க பணிகள் நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருச்சி மாநகராட்சியில் சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 39, 40, 41 மற்றும் 45வது வார்டுக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூர், கருமண்டபம், ஜெயநகர், அசோக்நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர், காவேரி நகர் ஆகிய பகுதிகளுக்கு பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில் திருச்சி – கரூர் சாலை விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஜீயபுரம் மோட்டார் அறையின் அருகில் செல்லும் குழாயினை சாலையோரம் மாற்றி அமைக்கும் பணி குடிநீர் வடிகால் வாரியத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

இதனால் இன்றும்(18) நாளையும்(19) குடிநீர் வினியோகம் இருக்காது எனவும், மீண்டும் 20ம் தேதி முதல் வழக்கம் போல குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *