திருச்சிராப்பள்ளி மாநகபாட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை
தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாள்தோறும் சிறப்பு
முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை 12.09.20201 அன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.



அதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கீழ்குறிப்பிட்டுள்ள 126 இடங்களில் 12.09.2021 அன்று காலை 7.00 மாலை முதல் 7.00 வரை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.


மேற்காணும் பட்டியல் www.trichycorporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இதுநாள் வரை தடுப்பூசி போடாத பொதுமக்களை அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசியினை போட்டு கொரோனா நோயிலிருந்து தங்களையும், தங்கள்
குடும்பத்தினரையும் மற்றும் சமுதாயத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்டுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments