இல்லம் தேடி ஸ்டாலின் குரல் எனும் தலைப்பில் அனைத்து வீடுகளுக்கும் தவறாமல் சென்று திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டலோடு,

திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன தலைமையில் திருச்சி மாவட்டம் துறையூரில் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் திமுகவின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் திண்ணை பிரச்சாரம் தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் ந.முரளி, நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், ஒன்றிய செயலாளர்கள் இள. அண்ணாதுரை, சிவ.சரவணன், எம் .வீரபத்திரன்,

பொதுக்குழு உறுப்பினர்கள் G.கிட்டப்பா, D.பூபதி மற்றும் அனைத்து அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் நகர கழக ஒன்றிய கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy vision







Comments