திமுகவின் மூத்த முன்னோடி எல்.கணேசன் காலமானார். அவரது மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் இரங்கல் தெரிவித்தார்.
இவரது மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: எனது இனிய நண்பர் திமுகவின் மூத்த முன்னோடி எல்.கணேசன் மரணமுற்ற செய்தியை கேட்டு செய்தி மிகவும் வேதனையை தந்தது. மொழிப்போர் தளபதி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட எல்.கணேசன் அவர்கள். எல்.ஜி என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட இவர் பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர். மிசா சட்டத்திற்கு எதிராகவும் போராடியவர்
எல். கணேசன் அனைத்து மக்களிடம் அன்பு பாராட்டும் பெற்றவர்.
அனைவரிடமும் பழகுவதற்கு இனிமையானவர். சமூக சிந்தனையுடைவர், எனக்கு நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தவர். திருச்சி பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். தமிழக மக்களுக்கு அனைத்து நன்மைகளையும் பாரபட்சம் காட்டாமல் தன்னாலான உதவிகளை செய்து வந்த பெருமை அவருக்குரியது. அவரின் இழப்பு தமிழ் சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.
அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுக்கும் எனது சார்பிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments