Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகரில் நாளை (05.03.2024) குடிநீர் விநியோகம் ரத்து

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பொதுதரைமட்ட கிணறு ஆண்டவர் ஆசிரமம் நீரேற்று நிலையத்திலிருந்து பழைய கரூர் பிரதான சாலை வழியாக செல்லும் குடிநீர் உந்து குழாய் இன்று (04.03.2024) உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், பழைய எல்லக்குடி, ஆலத்தூர், புகழ் நகர், பாரிநகர், சந்தோஷ் நகர் மற்றும் கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் (05.03.2024) ஒருநாள் இருக்காது.  

நாளை மறுநாள் (06.03.2024) அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *