இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணமாக ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் திருச்சி மாவட்ட எல்லைக்குள் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAV) பறக்கவிடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி ட்ரோன்கள் பறக்கவிடப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வே. சரவணன், தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments