Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி அருகே அரசு பேருந்தை கடத்திய போதை ஆசாமி – 2 கிலோமீட்டரில் சுற்றி வளைத்த போலீசார்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூரில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணித்து வந்து கொண்டிருந்தது.

Advertisement

அப்போது இடையில் களைப்பு மிகுதியால் ஓட்டுனரும் நடத்துனரும் டீ குடிக்க கடைக்கு சென்ற நேரம் பார்த்து அரசு பேருந்தை அங்கிருந்து ஒருவர் கடத்தி சென்றது பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்ட உடன், கரூரிலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து நிறுத்தப்பட்டிருந்த அரசு சிறப்பு பேருந்தை கடத்தியவர், அடுத்த இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பேருந்துடன் பிடிபட்டார்.

Advertisement

அவரை திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா போதையில் இருக்கும் அந்த நபர், தன்னுடைய பெயரை அஜித் என்று தெரிவித்துள்ளார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *