Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மது போதையில் பேருந்து ஓட்டிய ஓட்டுனர் – கண்ணாடி குத்தி பயணி காயம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துவாக்குடி செல்லும் தனியார் பேருந்தை ஓட்டி வந்த பேருந்தின் ஓட்டுநர் மது போதையில் பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது திருவெறும்பூர் பேருந்து நிறுத்ததில் மாணவர்களை இறக்கிவிட்டு கிளம்பிய தனியார் கல்லூரி பேருந்தின் மீது உரசியதால் தனியார் பேருந்து ஜன்னல் கண்ணாடி உடைந்து குத்தியதில் தனியார் பேருந்தில் சென்ற பயனி ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

அவரை சக பயணிகள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து தனியார் பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி விட்டார். இதுக்குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *