Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி மாமன்ற உறுப்பினர் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு

தனியார் நிதி நிறுவனத்தில் (ELFIN) பல கோடி பண மோசடி தொடர்பான புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திருச்சியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணபிரியா மற்றும் அதிகாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னிலைய மாநில துணை செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி 17வது வார்டு மாமன்ற  உறுப்பினருமான பிரபாகரன் இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரில் உள்ள அவரது மாமியார்  வீட்டில் கடலூர் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில்  பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருளாதார குற்றப்பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *