Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி ரவுடி மீது என்கவுண்டர்

திருச்சி புத்தூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி என்கிற துரை. இவர் மீது 4 கொலை வழக்கில் உள்ள நிலையில் அதில் ஒரு வழக்கில் விடுதலையாகி உள்ளார்.

மீதமுள்ள 3 வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ரவுடி துரை புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் ரவுடி துரையை பிடிக்க சென்ற போலீசாரை தாக்கியதால் என்கவுண்டரில் ரவுடி துரை சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ரவுடி துரையால் தாக்கப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொலை முயற்சி, வழிப்பறி திருட்டு உள்ளிட்ட 70 வழக்குகள் இவர் மீது பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *