Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ஆறு மற்றும் அரசு நிலம் ஆக்கிரமிப்பு – புகார்

திருச்சி தீரன்நகர் அரியாறு கரை மற்றும் அரசு நிலம் ஆக்கிரமித்து வேலியிடப்படுள்ளது. இது தொடர்பாக புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் மீதான நடவடிக்கை என்ன ஆனது என்று தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தீரன்நகர் பாரதியார் மக்கள் நல சங்கத்தினர் மாநகராட்சி மேயரிடம் மனு அளித்துள்ளனர். அதில்….. திருச்சி – திண்டுக்கல் ரோடு தீரன் நகரில் அரியார் பாலத்திற்கு முன்பாக அரியாற்றின் தென்பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் அங்குள்ள கடைகள் மதுபார்களின் கழிவுகள், சொல்லிக் கொள்ள முடியாத துர்நாற்றம் கொண்ட குப்பைகளையும்,

பிளாஸ்டிக் பொருள்களையும் கொட்டி தீரன் நகர் – திண்டுக்கல் மெயின் சாலையில் சிதறி கிடப்பதாலும் கடும் நோய்களை பரப்பும் துர்நாற்றம் ஆகியவைகளை அனைத்து மக்களும் சகித்துக் கொண்டு செல்வதுடன் சுமார் 10,000/-க்கும் மேற்கொண்ட மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் காலியாக கிடக்கும் இந்த இடத்தை வெளிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்கின்றனர். ஆகவே தாங்கள் மேற்படி இடத்தை பார்வையிட்டு தீரன் நகர் சிறுவர்கள், முதியோர் பொழுதுபோக்கு இடமாகவும், விளையாட்டு பூங்காவாகவும் அமைத்து மாசுபடியாத சுகாதாரத்துடன் கூடிய இடமாக அமைப்பதுடன் அறியார் கரையை பாதுகாத்திடவும் வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *