தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் துவக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து (07.10.2024) (திங்கட் கிழமை) அன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை அறிவிக்கப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments