Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

நடிகர் அஜித்தை காண குவிந்த ரசிகர்கள் – திக்முக்காடிய போலீஸ்

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில், ரைபின் கிளப் சார்பில், 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. வரும் 31ம் தேதி வரை, 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் தொலைவுக்கு என 3 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. 

கார் மற்றும் பைக் ரேஸ் பிரியரான நடிகர்  அஜித்குமார், துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று, துப்பாக்கி சுடும் போட்டியிலும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் கோயம்புத்துாரில் நடந்த போட்டியில் பங்கேற்ற அஜித்குமார், திருச்சியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக, கார் மூலம் திருச்சி வந்தார்.

இன்று காலை, கறுப்பு டீசர்ட் அணிந்து, ரைபிள் கிளப்புக்குச் சென்ற நடிகர் அஜித்குமார், ரைபில் கிளப் வெளியே திரண்டு இருந்த ரசிகர்களை பார்த்து கும்பிட்டதோடு, வெற்றிக்கான ‘தம்ஸ் அப்’ காட்டி விட்டுச் சென்றார்.  நடிகர் அஜித்குமார் போட்டியில் பங்கேற்றதால், ஆயுதப்படை வளாகத்துக்குள், போட்டியாளர்கள் தவிர, வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும், ரைபில் கிளப்புக்குள் அஜித்குமார் செல்லும் வீடியோ மற்றும் போட்டோக்கள், துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற வீடியோ போன்றவை சமூக வலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த திருச்சி மட்டுமின்றி, சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள், போட்டி நடைபெறும் ஆயுதப்படை வளாகம் முன் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார் அவர்களை விரட்டினர்.

பின்னர் நடிகர் அஜித் துப்பாக்கி சூடும் போட்டி நடைபெற்ற கட்டிடத்தின் மாடியில் நின்று ரசிகர்களுக்கு கை அசைத்தார் ரசிகர்கள் அவரை பார்த்து ஆரவாரம் கோஷம் எழுப்பினர்.அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். நாளை அவர் போட்டியில் பங்கேற்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *