Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சாலையில் சென்று கொண்டிருந்த காரில் தீ – 4 பேர் மீட்பு.

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக பாலசந்தர் (27) மற்றும் அவரது மனைவி இலக்கியா (26) ,பாலச்சந்திரன் நண்பர் அன்வர் அலி (27), இவரது மனைவி பசிலா (23) நான்கு பேரும் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு நண்பர்கள் விசேஷத்திற்கு சென்று கொண்டிருந்தனர். 

காரை பாலச்சந்தர் என்பவர் ஓட்டிச் சென்ற நிலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை மோரணிமலை அருகே கார் சென்று கொண்டிருந்த போது காரின் டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் கார் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதில் பயணம் செய்த நான்கு பேரையும் அருகில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டனர்.

அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்து கொண்டிருந்த கார் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

மேலும் இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இச்சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *