திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முதல் வெற்றிகரமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
திருச்செங்கோட்டை சேர்ந்த திரு தனசேகரன் ஆண் (வயது 52) கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக கடந்த 26.08.2025 அன்று திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் ஆர்.சிவகுமார் ஆலோசனையின் பேரில் மருத்துவக் குழுவான டாக்டர் ரஜினிகாந்த் பாட்ஷா, டாக்டர் ஜாய் வர்கீஸ், மயக்கவியல் நிபுணர் டாக்டர் விஜய் கண்ணா மற்றும் மருத்துவ பணியாளர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். மேற்கூறிய அறுவை சிகிச்சைக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் கோபக்குமார் கர்தா மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எடுகொண்டலு ஆகியோர் துணை புரிந்தனர் வெற்றிகரமான கண்காணிப்பை தொடர்ந்து
நோயாளி திரு. தனசேகரன் கடந்த 05.09.2025 அன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முறையான TRANSTAN அனுமதி பெற்று வெற்றி கரமாக டெல்டா மாவட்டங்களில் ஒரு மிக அரிய அறுவை சிகிச்சையை மேற்கொண்டதற்கு திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ குழுவினர் அனைவருக்கும் பாராட்டுதல்களை பல தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments