Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகரில் (03.02.2024) அன்று இலவச கண் பரிசோதனை முகாம்

வினோத் கண் மருத்துவமனை மற்றும் கோட்டத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் (03.02.2024) சனிக்கிழமை நடைபெற உள்ளது.

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் நடுநிலைப் பள்ளியில் காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை இம்முகாம் நடைபெற உள்ளது.

இந்த மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், நோய்கள் போன்றவற்றிற்கு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *