Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மருங்காபுரியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் – நவம்பர் 15 அன்று நடைபெறுகிறது

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை
களையும் பொருட்டு மருங்காபுரி வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு
முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு மற்றும் நுகர்வோர் எரிவாயு வாடிக்கையாளர்கள்
குறைதீர்க்கும் கூட்டமானது
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 15.11.2025 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மருங்காபுரி வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் மருங்காபுரி வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *