Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்

ஒவ்வோர் ஆண்டும் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றிய 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி-24 ல் மாநில அரசின் விருது வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர் பெண் குழந்தைகளின் பெண் கல்வி, பெண்குழந்தை தொழிலார் ஒழிப்பு. பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், சிறப்பான / தனித்துவமான சாதனை,

பெண்களுக்கெதிரான சமூக அவலங்கள். மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் என சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பான வகையில் பங்காற்றியிருக்க வேண்டும். 

விளையாட்டு, தற்காப்பு கலை போன்றவற்றில் பரிசுகள் பெற்றால் மட்டும் போதாது. பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றியிருத்தல் வேண்டும். அவ்வாறான தகுதியுடையோர் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (http://awards.tn.gov.in) விண்ணப்பம் செய்திட வேண்டும்.

தாம் ஆற்றிய சிறப்பான பங்களிப்பினை தெளிவாக கருத்துருக்களாக பதிவு செய்து விண்ணப்பம் செய்திட கடைசி நாள் : 15-நவம்பர்-2024. அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *