Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி ஒத்தக்கடை சிக்னலில் அரசு பேருந்து மோதி விபத்து இருவர் படுகாயம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒத்தக்கடை சிக்னல் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது இரு சக்கர வாகனம் வந்த பொழுது அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் இரு சக்கர வாகனம் பேருந்துக்கு அடியில் சிக்கியது. இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை உடனடியாக மீட்டு பொதுமக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி உள்ளனர்.

சிக்னலில் விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து ஓட்டுனரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.விபத்து குறித்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய… 

https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய….

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *