Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

காவிரி ஆற்றில் அதிக நீர்வரத்து – பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்

கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து முறையே வினாடிக்கு 70,000 கனஅடி மற்றும் 25,000 கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்குத் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளதாகவும்,

அணையிலிருந்து உபரி நீராக சுமார் 50,000 முதல் 70,000 கனஅடி காவிரியில் திறக்கப்படவுள்ளதால், நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, காவிரி மற்றும் கொள்ளிட ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சலவைத்தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் தங்கள் உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ, பொழுதுபோக்கவோ பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் அல்லது ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுக்கக் கூடாது என்றும், குழந்தைகள் நீர்நிலைகளில் இறங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கால்நடைகளை குளிப்பாட்ட நீர்நிலைகளுக்கு அழைத்துச் செல்லக்கூடாது. பாலங்களை தவிர்த்து பாதுகாப்பற்ற இடங்களில் ஆற்றைக் கடக்கவும் கூடாது எனவும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சரவணன் தெரிவித்துள்ளார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://www.threads.net/@trichy_vision
https://t.me/trichyvision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *