Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திமுக வெற்றி பெற்றால் தொகை இரட்டிப்பு – மகளிர் நல வாக்குறுதியுடன் கதிரவன் உரை

மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் எம்எல்ஏ கதிரவன் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஓட்டுகள் சேகரித்து வருகிறார். அந்த வகையில் அழகியமணவாளம், கோவத்தக்குடி, மாதவப்பெருமாள் கோவில், திருவாசி, மேல்பத்து, பூனாம்பாளையம் ஊராட்சிகளில் நடந்த பிரச்சார கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து எம்எல்ஏ கதிரவன் பேசியதாவது,

2021 சட்டசபை தேர்தலில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் கதாநாயகியாக இடம் பெற்றது மகளிருக்கான உரிமைத் தொகை திட்டம். அப்போது அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், எப்படி மாதம் தோறும் பெண்களுக்கு பணம் தர முடியும்? இதெல்லாம் நிறைவேற்றப்பட முடியாத திட்டம் என்று வாக்குறுதியை பொய்,பொய் என கூக்குரல் இட்டன.ஆனால், அதிமுக தனது தேர்தல் வாக்குறுதியிலும் ரூபாய் 1500 வழங்குவதாக அறிவித்தது. ஆனால் அதை நம்ப மறுத்த தமிழக மக்கள் திமுகவை ஆட்சியில் அமர்த்தினர். அதன்படி 2023-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகையை, உரிமைத் தொகையாக வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, இதுவரை ஒரு மாதம் கூட விடுபடாமல் ஒவ்வொரு குடும்ப பெண்களின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 1000 உரிமைத் தொகை பிரதி மாதம் 15-ம் தேதிக்குள் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டம் தொடங்கிய போது பல பெண்கள் தங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்த காரணத்தினால் மீண்டும் அவர்களுக்கு, ஸ்டாலின் என்ற சிறப்பு திட்ட முகாமில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கூடுதலாகவும் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி தமிழக முழுவதும் உள்ள ஒரு கோடியே 30 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று இரண்டாம் முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்கும் போது, இந்த தொகையை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் மகளிருக்கு உரிமை தொகை திட்டத்தை நிறைவேற்றவே முடியாது என தட்டிக் கழித்த அதிமுக, இந்த தேர்தலில், திமுக, ரூ. 2000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்க உள்ளதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அவர்கள் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாகவே இந்த அறிவிப்பு மட்டும் வெளியிட்டனர்.ஒரு பக்கம் தமிழக மக்களை மடைமாற்றம் செய்ய அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ரூபாய் 2000 வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தேர்தல் சமயத்தில் இத்திட்டத்தை முடக்குவதற்கு மத்திய பாஜக அரசோடு சேர்ந்து அதிமுக சதி செய்தது. அதனை அறிந்து கொண்ட தமிழக முதல்வர் உரிமைத் தொகை பெறும் ஒவ்வொரு பெண்களும் வங்கிக் கணக்கிலும் தலா ரூபாய் 5000 வரவு வைத்தார். தேர்தல் காலமான

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கு ரூபாய் 3000, கோடைகால சிறப்பு தொகையாக ரூபாய் 2000 வழங்கி உள்ளார். இதனால் தங்களது திட்டம் எடுபடாத அதிமுகவும், அதன் கூட்டணி கட்சியான பாஜகவும் இப்பொழுது இந்தத் திட்டத்தை நிரந்தரமாக நிறுத்துவதற்கு சதி செய்து வருகின்றனர். அவர்கள் தேர்தல் அறிக்கையில் ரூபாய் 2000 வழங்குவதாக அறிவித்திருந்தாலும் தேசிய அளவில் இதுவரை பேசுபொருளாக்கி இந்த திட்டத்தை முடக்கவும், நிரந்தரமாக தடை செய்யவும் அதிமுக செய்து வருகிறது. இந்த தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும், மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் விழிப்புடன் இருந்து உதயசூரியனுக்கு அளித்து மாபெரும் வெற்றியை தேடி தர வேண்டும். இவ்வாறு எம்எல்ஏ கதிரவன் பேசினார்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*

*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *