திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் மாவட்டம், காமரசவல்லி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் ராஜேந்திரன் என்பவர் தனது செல் போனிற்கு வந்த குறுஞ்செய்தியில் டவர் அமைப்பதற்கு முன்பணம் ரூ. 40,00,000 மற்றும் மாத வாடகை ரூ. 40,000 தருவதாக வந்தது. இதனை நம்பி 2018 ஜனவரி 29 முதல் 2020 நவம்பர் 9 வரை செல்போனில் தொடர்பு கொண்டு சிறு சிறு தொகையாக இதுவரை ரூ.23,98,900 ஏமாந்து விட்டதாக அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 14.05.2021 -ம் தேதி அன்று புகார் அளித்தார்.
 அதன் பேரில் அரியலூர் சைர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உடனடியாக அவரது வங்கி கணக்கில் ரூ.9.33,745 முடக்கம் செய்துள்ளனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) இணையக் குற்றப்பரிவு திருமேனி, மடத்தரவின் படி இணையக் குற்ற காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருசெங்குட்டுவன் தலைமையில், உதவி ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர்கள் உள்பட 5 நபர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
அதன் பேரில் அரியலூர் சைர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உடனடியாக அவரது வங்கி கணக்கில் ரூ.9.33,745 முடக்கம் செய்துள்ளனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) இணையக் குற்றப்பரிவு திருமேனி, மடத்தரவின் படி இணையக் குற்ற காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருசெங்குட்டுவன் தலைமையில், உதவி ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர்கள் உள்பட 5 நபர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு டெல்லி சென்று சகர்பூர் இந்திரா நகர் என்ற இடத்தில் சுப்பிரமணியத்தின் மகன் மருதுபாண்டியன் (37), சண்முகம் மகன் ராஜேஷ் (36), ராமசாமி மகன் முருகேசன் (40), பாலகிருஷ்ணன் மகன் ராஜ்கிஷன் (42) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 3 லேப்டாப் 42 செல்போன்கள், 18 சிம்கார்டுகள், 7 வங்கி கணக்கு புத்தகங்கள், 19 ஏ.டி.எம் நார்டுகள் மற்றும் ரூ1,00,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேற்கண்ட நபர்கள் டவர் அமைப்பது, லோன் தருவது, ஏர்ப்போர்ட்டில் வேலை வாங்கி தருவது போன்ற இணையக்குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வருகிறது.
தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு டெல்லி சென்று சகர்பூர் இந்திரா நகர் என்ற இடத்தில் சுப்பிரமணியத்தின் மகன் மருதுபாண்டியன் (37), சண்முகம் மகன் ராஜேஷ் (36), ராமசாமி மகன் முருகேசன் (40), பாலகிருஷ்ணன் மகன் ராஜ்கிஷன் (42) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 3 லேப்டாப் 42 செல்போன்கள், 18 சிம்கார்டுகள், 7 வங்கி கணக்கு புத்தகங்கள், 19 ஏ.டி.எம் நார்டுகள் மற்றும் ரூ1,00,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேற்கண்ட நபர்கள் டவர் அமைப்பது, லோன் தருவது, ஏர்ப்போர்ட்டில் வேலை வாங்கி தருவது போன்ற இணையக்குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வருகிறது.
 எனவே நான்கு பேரின் வங்கி கணக்குகள் அவர்களின் அசையும் அசையா சொத்துக்கள் மீது காவல்துறையினர் விசாரிக்கின்றனர். சைபர் கிரைம் தனிப்படையினரின் சிறந்த பணிக்காக அவர்களை நேரில் அழைத்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். மேலும் இது போன்று குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
எனவே நான்கு பேரின் வங்கி கணக்குகள் அவர்களின் அசையும் அசையா சொத்துக்கள் மீது காவல்துறையினர் விசாரிக்கின்றனர். சைபர் கிரைம் தனிப்படையினரின் சிறந்த பணிக்காக அவர்களை நேரில் அழைத்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். மேலும் இது போன்று குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           129
129                           
 
 
 
 
 
 
 
 

 24 March, 2022
 24 March, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments