Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தலைக்கவசம் அணிவது குறித்து நூதன விழிப்புணர்வு!

திருச்சியில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியை சேர்ந்த கராத்தே முத்துக்குமார் என்பவர் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

 இந்நிகழ்வு குறித்து கராத்தே முத்துக்குமார் கூறுகையில்,

 கடந்த மாதம் இரு சக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்கள் மது போதையில் வாகனம் ஓட்டிவந்ததில் என் தந்தை விபத்துக்குள்ளானர்.காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது.

 

 விபத்து ஏற்படுத்திய இளைஞர்களை விசாரித்தபோது அவர்கள் தலைக்கவசம் அணியவில்லை அதேபோன்று அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை, இது போன்று விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

 கண்டோன்மெண்ட் பகுதியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கண்டோன்மெண்ட் போக்குவரத்து காவலர் ரமேஷ் முன்னிலையில் பொதுமக்களுக்கு தலைக்கவசம் வழங்கினோம் என்றார்.இந்நிகழ்வு பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *