Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ககன்யான் திட்டத்தில் செயற்கைக்கோளில் ரோபோ வைத்து அனுப்ப திட்டம்- இஸ்ரோ தலைவர்

ககன்யான் திட்டத்தில் செயற்கைக்கோளில் ஆளில்லாமல் ரோபோ வைத்து அனுப்ப திட்டம் திருச்சி விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன்-பேட்டி

வரும் 30ம் தேதி இஸ்ரோ நாசா சேர்ந்து NISAR சிந்தடிக் அப்ரசர் ரேடார் செயற்கைக்கோள்விண்ணில் ஏவப்பட உள்ளோம்.செயற்கைக்கோள் இந்தியா செய்கிறோம். ஜி எஸ் எல் வி F16இந்த வரிசையில் பதினெட்டாவதுராக்கெட் .நிலநடுக்கம்.பேரிடர் குறித்த தகவல்களை தரக்கூடிய செயற்கைக்கோள்.

இஸ்ரோவில் இந்த வருடம் 12 ராக்கெட்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் உள்ள செயற்கைக்கோள் ஏவப்படுகிறது.இந்தியாவில் தயாரித்து இந்தியர்களை அனுப்பக்கூடிய ககன்யான் திட்ட மூலம்ககன்யான் ஜி 1 ஆளில்லாமல் ரோபர்ட் வைத்து டிசம்பரில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.சிந்து ஆபரேஷனுக்கு பிறகு இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தேவை அதை அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். சிந்தூரில் நம்முடைய சேட்டிலைட் துல்லியமான தகவல்களை கொடுத்தது. நான்கு வருடத்திற்குள் இன்னும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் செயற்கைக்கோளை ஏவயுள்ளோம். மக்களின் பாதுகாப்பு தான் ரொம்ப முக்கியம்.அதற்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அனைத்தையும்

செய்து கொண்டிருக்கிறோம்.நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு என்னவெல்லாம் வேண்டுமோ அவை அனைத்தையும் இஸ் இஸ்ரோ செய்து கொண்டிருக்கிறது.ககன்யான் திட்டத்தின் ரூ 20 ஆயிரம் கோடி ரூபாய் பாரத பிரதமர் கொடுத்துள்ளார். அதிக ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறோம்.வெற்றிகரமாக செல்லக்கூடிய செயற்கைக்கோள்களின் ஆராய்ச்சிகள் முடிந்து விட்டது.மனிதர்களை வைத்து அனுப்ப கூடிய ராக்கெட்களின் ஆராய்ச்சிகளும் முடிந்துவிட்டது.

மனிதர்களுடன் விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்பும் பொழுது பாதுகாப்பு மிக அவசியம். அதில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை பாதுகாப்பாக மாற்று ராக்கெட் கொண்டு செல்வது உள்ளிட்டவைகள் ஆராய்ந்து தயார் நிலையில் உள்ளோம்.

உலகத்தில் விண்வெளி துறையில் இந்தியர்களின் பங்கு மிக முக்கியமானது விண்ணில் ஏவிய ராக்கெட்டை நிறுத்தி அதில் ஏற்படும் குறைகளை சரி செய்து மீண்டும் விண்ணில் அனுப்பும் திறமை வாய்ந்தவர்கள் இந்திய விஞ்ஞானிகள்.

அப்துல் கலாம் அவர்கள் கூறியது போல் உலகிலேயே விண்வெளி துறையில் இரண்டாவது சாதனை புரியும் நாடாக உள்ளது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

 

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *