Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தீப திருநாளை ஒவ்வொரு ஆண்டும் உங்களுடன் கொண்டாடுவதே மகிழ்ச்சி – ஆட்சியர் பெருமிதம்

திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டார்.

இதில் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக வேஷ்டி சேலை இனிப்புகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்…. தூய்மையாளர்களின் பணி மகத்தான பணி நாம் தூய்மையாக வெளியில் நடமாடுவதற்கு இந்த தூய்மை பணியாளர்களின் பணி முக்கியத்துவமான ஒன்று.

தூய்மைப் பணியாளர்கள் பண்டிகை முடிந்த கையோடு ஒய்வில்லாமல் அவர்கள் குடும்பத்தினரையும் தாண்டி இந்த ஊரும் நாடும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று உழைக்கின்றனர். அப்படிப்பட்ட உழைக்கும் மக்களோடு இணைந்து இனிய தீபாவளியை கொண்டாடுவது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உங்களோடு ஒருநாள் மகிழ்ச்சியாக தீபத்திருநாளை கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி விஷன் ஆசிரியர் & நிர்வாக இயக்குனர் ராமசுப்பிரமணியன், திருச்சி விஷன் தலைமை செயல் அதிகாரி செந்தில்குமார், அனுஜ் டைல்ஸ் உரிமையாளர் தனசேகரன், BNI Emperor நசீர்அலி மற்றும் உறுப்பினர்கள் ஆதி சரவணன், வாசு தேவன், நூர்முகமது, ஷேக்கமல், சிறப்பு அழைப்பாளர்கள் சுப்பையா நினைவு நடுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம், சமூக ஆர்வலர் பெட்டவாய்த்தலை சரவணன், ஓவியர் ஜே கே என்கின்ற ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

 https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *