Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

திருச்சியில் உள்ள கிளை சிறைகளில் வேலை வாய்ப்புகள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள்துறையின் கீழ் இயங்கும் திருச்சி மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் உள்ள முசிறி மற்றும் துறையூர் கிளைச்சிறைகளில் காலியாக உள்ள தலா ஒரு தூய்மை பணியாளர் (Cleanliness Worker) பணியிடத்திற்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

(01.01.2023) அன்று 18 வயதிற்கு மேற்பட்ட SCA/SC/ST 37 வயதுக்குட்பட்டவர்கள், MBC/BC 34 வயதுக்குட்பட்டவர்கள், OC 32 வயதுக்குட்பட்டவர்கள், (GT-GL Non Priority – 1 நபர்) மற்றும் (SC – GL – Priority -1 நபர்) தெரிவு செய்து நியமனம் செய்யப்பட உள்ளது. தூய்மை பணியாளர்கள் பதவி ஊதிய விகிதம் Level-1 (15700-50000) – Rs.15700/-ஆகும். மேற்படி, தூய்மை பணியாளர் (Cleanliness Worker) பதவிக்குரிய தகுதி பெற்றவர்கள்

சுய விவரங்களை (Resume) உரிய கல்வி, சாதி மற்றும் முன் அனுபவ சான்று நகல்களுடன் (02.02.2024)க்குள் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு கிடைக்கப் பெறும் வகையில் அனுப்பிட வேண்டும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *