Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

லால்குடி பரபரப்பு: தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் உறவினர் வீட்டில் ₹50 லட்சம் பறிமுதல்!

தமிழ்நாட்டிற்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இதனால் தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என பல்வேறு கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுப்பதற்காக தமிழக முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் பகல் இரவு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் பாரிவள்ளலும், அதிமுக சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதிமுகவில் இணைந்த லீமா ரோசும், தமிழக வெற்றி கழகம் சார்பில் டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளர் கு.ப கிருஷ்ணனும், நாம் தமிழர் கட்சி சார்பில் தர்மராஜன் போட்டியிடுகிறார்.

தற்போது தேர்தல் களம் சூடு பிடித்து உள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளவனூர் நீலமேகம் மற்றும் அவரது மகன் அரவிந்த் வீட்டில் பல லட்சம் ரூபாய் இருப்பதாக லால்குடி வட்டாட்சியரும் தேர்தல் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சோதனை செய்தபோது 10 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்த உள்ளது. இதனால் தேர்தல் அலுவலர் தமிழ்ச்செல்வன் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருமான வரித்துறையினர் சென்று அரவிந்த் வீட்டில் சோதனை செய்தபோது 50 லட்ச ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது இதனை அடுத்து 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்தனர்.

மேலும் 50 லட்சம் ரூபாய் பணத்தை வைத்துள்ளீர்கள் இதற்கான ஆவணம் இருக்கிறதா என்பது குறித்து எல்லாம் வருமான வரித்துறையினர் கேட்டனர் முன்னுக்குப் பிறனாக பேசியதால் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வேட்பாளருக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு நேர்மையாக உங்கள் வாழ்க்கை செலுத்துங்கள் என்று தெரிவித்த நிலையில் தமிழக வெற்றிக்கழக டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன் மைத்துனர் வீட்டில் 50 லட்ச ரூபாய் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லால்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக வேட்பாளர் கூபா கிருஷ்ணன் அதிமுகவில் அமைச்சராக இருந்த பொழுது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் போது அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது ஆற்றில் பணத்தை மூட்டையில் கட்டி கொட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *