Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கொலைக்குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை – திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி தில்லைநகா் பகுதியில் மது அருந்தும் போது ஏற்பட்ட வாய்த்தகராறில் பிரபு (எ) பிரபாகரன் என்பவர் ராஜா என்பவரை கடந்த 12.07.2016-ஆம் தேதியன்று அடித்ததன் காரணமாக, ராஜா கடந்த 07.08.2016 அன்று இரவு சுமார் 08.00 மணியளவில் தென்னூர் விவேகானந்தர் சாலை, மேட்டுத்தெருவில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகில், பொதுமக்கள் 
முன்னிலையில் பலர் பார்க்க, தென்னூரைச் சேர்ந்த தனது கூட்டாளிகள் தினேஷ்குமார், பாண்டியராஜன் (எ) பாண்டியராசன் ஆகியோர்களுடன் அரிவாள் மற்றும் கொடூர ஆயுதங்களால் தாக்கியதில் பிரபு (எ) பிரபாகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது தொடர்பாக தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தில்லைநகர் காவல் நிலைய ஆய்வாளர் புலன் விசாரணை மேற்கொண்டு எதிரிகள் மூவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கின் புலன் விசாரணை முடிந்து எதிரி மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் திருச்சிராப்பள்ளி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் விசாரணையை முடித்து, இன்று 17.08.2021-ம் தேதி எதிரிகள் ராஜா, தினேஷ்குமார், பாண்டியராஜன் (எ) பாண்டியராசன் ஆகியோர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன்படி ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.2000/- அபராதம்

தடுக்க சென்ற சாட்சியை அரிவாளால் வெட்டி காயம் ஏற்படுத்திய எதிரி தினேஷ்குமாருக்கு, ரூ.2000/- கூடுதல் அபராதமும் விதித்தும், அபராதத் தொகையை கட்டத்தவறினால் ஒரு வருடம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்புரை வழங்கினார். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த தில்லைநகர் காவல் ஆய்வாளா் மற்றும் காவலர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாரட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *