திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பால்பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் சென்னையிலிருந்து கம்பம் நோக்கி 34 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செங்கல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி பின்புறம் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் மற்றும் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். லாரி- பேருந்து விபத்து குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           130
130                           
 
 
 
 
 
 
 
 

 02 April, 2024
 02 April, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments