Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

லாட்டரி விற்பனை செய்தவர் கைது

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதி மிகவும் பரபரப்பாக காணப்படும் கடைவீதியாக உள்ளது. இப்பகுதியில் ஆன்லைன் லாட்டரி மிகவும் அமோகம் ஆக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்பட்டு வருகிறது.

 இந்நிலையில்திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் ஒய் ரோடு பகுதியில் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தனி பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பெயரில் தனிப்பிரிவு போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் .

அப்போது திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி வடக்கு தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் விஜயகுமார் (44) என்பவர் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். 

அதனைத் தொடர்ந்து விஜயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விற்பனை செய்யப்படுவதை இப்பொழுதில் காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *