Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ரஷ்யாவில் படிக்கும் மருத்துவ மாணவர்களிடம் ரூபாய் 5.9 கோடி ஏமாற்றியவர் கைது

ரவிகுமார் என்பவரின் மகள் ரஷ்யா நாட்டில் மடோலியா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் MBBS இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும், அவரது மகளின் கல்லூரியின் படிப்பு கட்டணத்தினை செலுத்த தமிழ்நாட்டில் உள்ள உப்பிலியபுரம், IOB Bank அருகில் வசித்து வரும் ஜெய்சரண் ராமசாமி என்பவருக்கு (இவர் தற்போது சென்னை மெட்ரோ பணி மருத்துவ அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன்பு ரஷ்யா நாட்டில் உள்ள Siberia Federal University-ல் MBBS படித்து வந்துள்ளார்).

Part time வேலையாக Online பண பரிவர்த்தனை வேலை பார்த்து வந்துள்ளார் G-Pay மூலமாக Rs.3,60,000/-ம் செலுத்தியுள்ளார். அந்த பணத்தை கல்லூரியில் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். பிறகு ஜெயசரணை பற்றி விசாரிக்கும்போது இந்தியாவில் இருந்து ரஷ்யாவில் படித்து வரும் சுமார் 100-ற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இதுபோன்று பல லட்சங்களை தனது வங்கி கணக்கில் பெற்று பணத்தை திருப்பி தராமலும்,

கல்லூரியில் செலுத்தாமலும் சுமார் RS.5.90 கோடி வரை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.ரவிக்குமார் பணத்தை திருப்பி கேட்டதற்கு உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என மிரட்டும் தொணியில் பேசியுள்ளார்.பணத்தினை உரிய காலத்திற்குள் திருப்பி தராத காரணத்தினால் ரவிக்குமார் மற்றும் ஏமாற்றப்பட்டவர்கள் அனைவரும் ஜெயசரணிடம் பணத்தை விரைவாக கொடுக்குமாறு கேட்டுள்ளார்.


அதற்கு ஜெயசரண் நான் எப்போது தருகிறோனோ அப்போது தான் வாங்கி கொள்ள வேண்டும் அடிக்கடி தொந்தரவு செய்தால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என ரவிக்குமாரை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியுள்ளார்.இது தொடர்பாக ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஜெயசரண் கைது செய்து துறையூர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு நடுவர் அவர்கள் ஜெயசரணை நீதிமன்ற பிணையில் விடுவித்தார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *