திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை கல்லாமேடு அருகே சாலை விபத்து. விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடையாளம் தெரியா சுமார் 50 வயது மதிக்கத்தக் ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியானார்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான அடையாளம் தெரியாத சிதறிக் கிடந்த உடல் பாகங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வளநாடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments