Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தியாகராஜ பாகவதரின் நினைவு நாள் – மலர் தூவி மரியாதை

விஸ்வகர்மா மகாஜன சபையின் சார்பில் வருடம் தோறும் தியாகராஜ பாகவதரின் நினைவு நாளன்று அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று 64வது நினைவு நாளையொட்டி சங்கத்தின் தலைவர் குமரப்பா ஆச்சாரி தலைமையில்

திருச்சி சங்கிலியாண்டபுரம், மணல் வாரித்துறை ரோட்டில் அமைந்துள்ள விஸ்வகர்மா ருத்ர பூமியில் தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார், ஏழிசை மன்னர் என்று அழைக்கப்படும் எம்.கே.தியாகராஜ பாகவதரின் சமாதியில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அவரது தாயார் மாணிக்கத்தம்மாள், தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரியார் ஆகியோர் சமாதிகளுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நிர்வாகிகள் கந்தசாமி ஆச்சாரி, வெள்ளையன் ஆச்சாரி, பாலசுப்ரமணி

ஆச்சாரி, மருதமுத்து ஆச்சாரி, மகேஸ்வரன் ஆச்சாரி சுப்பண்ணா ஆச்சாரி உட்பட ஏராளமான கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *