Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் எம்ஜிஆர் சிலை உடைப்பு – அதிமுகவினர் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டி மாங்குடி கிராமம் இந்த கிராமத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு அதிமுக நிர்வாகிகளால் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டது.

நேற்று நள்ளிரவில் சமுக விரோதிகளால் எம்ஜிஆர் சிலையை இடது கையை உடைத்து இடுப்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தி உள்ளனர். இன்று 22ம் காலையில் அதிமுகவினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையெடுத்து ரெட்டிமாங்குடி கிளை செயலாளர் அம்மாசி மற்றும் கட்சி நிர்வாகிகள் மூலம் புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர்க்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மேலும் சிறுகனூர் காவல்துறைக்கும், லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என்று ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டமும் சாலை மறியல் செய்தனர்.

மறியலில் மாவட்ட அவை தலைவர் அருணகிரி புள்ளம்பாடி வடக்கு தெற்கு ஒன்றிய துறை செயலாளர்கள் கோவிந்தசாமி பாண்டியன் ஒ து செயலாளர் பிச்சமணி ரெட்டி மாங்குடி ஒ கவுன்சில் ரவிச்சந்திரன் மாவட்ட பிரதிநிதி மருதமுத்து மற்றும் ரெட்டிமாங்குடி கிளை செயலாளர்கள் சீனி பெண்கள் உள்பட ஏராளமானோர் சாலை மறியல் செய்தனர்.

காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜித் தங்கம், சாலைமறியலில் ஈடுபட்ட அதிமுக வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சிலையை சேதப்படுத்தியவர்ள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதின்பேரில் அதிமுக விரனர் சாலைமறியலை கை விட்டு கலைந்து சென்றனர். இதனால் ரெட்டிமாங்குடி கிராமத்தில் பெரும் பரப்பரப்பாக உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *