Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் மினி பேருந்து திருட்டு. ஒருவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு

திருச்சி சிந்தாமணி ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் மினி பேருந்துகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி பாலசுப்பிரமணியன் என்பவரிடமிருந்து ஒரு மினி பேருந்தை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி பின்னர் அதை பழுது பார்த்து தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தாக கூறப்படுகிறது.

திடீரென அந்த மினி பேருந்தை நிறுத்தி வைத்த இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், யாரோ திருடி விட்டதாக கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் காணாமல் போன மினி பேருந்து கும்பகோணம் அருகே இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று அந்த பேருந்தை மீட்டு வந்தனர்.

பின்னர் இந்த பேருந்தை திருடிச்சென்ற மயிலாடுதுறை அருகே சீர்காழி தில்லை விடங்கன் திட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் ராஜ் என்பவரை கைது செய்தனர். மேலும் மினி பேருந்து திருடிச்சென்ற வழக்கில் தலைமறைவாகியுள்ள பாலு மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *