Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் மகேஸ்

117வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள “பசும்பொன் முத்துராமலிங்க தேவர்” அவர்களின் திருவுருவச் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் – திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை ணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்நிகழ்ச்சியில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே. என். சேகரன், சபியுல்லா, லீலாவேலு, பகுதி செயலாளர் இ.எம். தர்மராஜ், மணிவேல், சிவகுமார், ஒன்றிய செயலாளர் கே. எஸ். எம். கருணாநிதி, கங்காதரன், ராஜேந்திரன், நகர செயலாளர் காயாம்பு,

பேரூர் செயலாளர் தங்கவேல், மாநில – மாவட்ட – மாநகர நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் – துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *