Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மாதவரம் முதல் திருச்சி வரை இரண்டு புதிய குளிர்சாதனப் பேருந்துகள்- கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்கள்

திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – விழுப்புரம் லிமிடெட்
காஞ்சிபுரம் மண்டலம் மாதவரம் முதல் திருச்சி வரை இரண்டு புதிய குளிர்சாதனப் பேருந்துகளை( மாதவரத்தில் இருந்து பிற்பகல் 12 .15 முதல் திருச்சி பஞ்சபூர். கலைஞர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து


முனையம் வரை , பிற்பகல் 2 .15 மணி முதல் மாதவரத்தில் இருந்து திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் மு கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை, மற்றும் திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் மு .கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து இரவு 9. 50 மணிக்கும் இரவு 11. 25 மணிக்கு மாதவரம் வரையும்) நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள், போக்குவரத்து துறை அமைச்சர் த.சிவசங்கர் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ,மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன் அவர்கள்,

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவீ. கணேசன் அவர்கள், தொழில்துறை அமைச்சர் டி .ஆர். பி. ராஜா , ஆகியோர் இன்று 30/07/2025 கொடியசைத்துதொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக வாரிய தலைவர் கௌதமன் அவர்கள்

விழுப்புரம் மேலான இயக்குனர் இயக்குனர் குணசேகரன் அவர்கள், திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் D. சதீஷ்குமார் அவர்கள் மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *