Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருவாரூர் நோக்கி கலைஞர் சுடர் ஓட்டம் அமைச்சர்கள் துவக்கி வைப்பு

திருவாரூர் நோக்கி கலைஞர் சுடர் ஓட்டம் அமைச்சர்கள் துவக்கி வைப்பு

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூரில் கலைஞர் நினைவு போற்றும் வகையில் திருவாரூர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் கலந்து கொண்டு கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார்.

இதனை ஒட்டி திருச்சி தெற்கு மாவட்ட, கிழக்கு மாநகர மாவட்ட மாணவர் அணி சார்பில் கலைஞர் சுடர் தொடர் ஓட்டம் திருச்சி சிந்தாமணி அண்ணா சாலையிலிருந்து புறப்பட்டது. இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

திருவாரூரில் நடைபெற உள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட உள்ளது.

திருச்சியில் சிந்தாமணி அண்ணா சிலை துவங்கிய தொடர் கலைஞர் சுடர் ஓட்டம் திருச்சியில் இருந்து திருவரம்பூர், துவாக்குடி, செங்கிப்பட்டி, வல்லம், தஞ்சை, நீடாமங்கலம், கொரடாச்சேரி வழியாக திருவாரூர் சென்று அடைகிறது.

இந்நிகழ்வில் கோட்டத் தலைவர் மதிவாணன், மற்றும் கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *