Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் மோடி, அம்பானி உருவ பொம்மை எாிப்பு போராட்டம்!!

மத்திய அரசு கொண்டு வந்ததுள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற பஞ்சாப், அாியானா, உத்திரபிரதேசம், ராஜஸ்தான் , உத்தரகான்ட் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் கொட்டும் பனியில், கடும் குளிரையும் பாராமல் தொடா்ந்து 10 தினங்களாக போராடி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் விவசாயசங்கங்கள் தொடா் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் மோடி, அம்பானி உருவ பொம்மை எாிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூா் ஒன்றியம் திருப்பராய்துறையில் அகில இந்திய போராட்ட ஒரு்ங்கிணைப்பு குழு சாா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவா் K.முகமதலி தலைமையில் விவசாயிகள் உருவபொம்மை எாிப்பு போராட்டத்தை நடத்தினா்‌.

Advertisement

போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அயிலை சிவ சூாியன், த.வி.ச மாநகா் மாவட்ட செயலாளா் பாண்டியன், வினோத்மணி, பழனிவேல், சிவகுமாா் உள்ளிட்ட நூற்றுகணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *