நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் இன்று (29.07.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்வதையும் முகாமின் செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
அரசுத்துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கிடும் வகையிலும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையிலுமான ‘உங்களுடன் ஸ்டாலின்” எனும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த (15.07.2025) அன்று தொடங்கி வைத்து, மாநிலம் முழுவதும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஜூலை 15-ந் தேதி முதல் நவம்பர் 14 ந் தேதி வரை மாநகராட்சி பகுதிகளில் 32 இடங்களிலும், முசிறி, துறையூர், இலால்குடி, துவாக்குடி மற்றும் மணப்பாறை ஆகிய 5 நகராட்சி பகுதிகளில் 48 இடங்களிலும், 14 பேரூராட்சிப் பகுதிகளில் 28 இடங்களிலும், 14 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 243 முகாம்கள் என மொத்தம் 351 முகாம்கள் நடைபெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாவட்டம் முழுவதும் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இன்று (29.07.2025) பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணும் வகையில் திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம் கோ.அபிஷேகபுரம் வார்டு எண்.5 பகுதியில் வசிப்போர் பயன்பெறும் வகையில் உறையூர் வெக்காளியம்மன் கோவில் காவேரி மகாலிலும், துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட M.D சாலை பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் துவாக்குடி சமுதாய கூடத்திலும், இலால்குடி நகர்ப்புற பஞ்சாயத்து பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் அப்பாதுரை கிராமம் அமிர்தம் மஹாலிலும், துறையூர் வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் அம்மாபட்டி சுதர்ஸனா
பாலிடெக்னிக் கல்லூரியிலும், தாத்தையங்கார்பேட்டை வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில்
தாத்தையங்கார்பேட்டை வாளசிராமணி
உயர்நிலைப்பள்ளியிலும், உப்பிலியபுரம் வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் உப்பிலியபுரம் விக்னேஷ் திருமண மகாலிலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாம்களின் வாயிலாக நகர்புறத்திற்கு 13 துறைகள் மூலமாக 43 சேவைகளும், ஊரகத்திற்கு 15 துறைகள் மூலமாக 46 சேவைகளும் வழங்கப்படும் வகையில் இம்முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் இன்று (29.07.2025) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் வெக்காளியம்மன் கோவில் தெரு காவிரி மஹாலில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமையும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட எம் டி சாலையிலுள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் எஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்வதையும் முகாமின் செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
மேலும், இலால்குடி நகர்ப்புற பஞ்சாயத்து பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் அப்பாதுரை கிராமம் அமிர்தம் மஹாலில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வுகளில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் மாவட்ட நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் க.வைரமணி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைகள் நிலமெடுப்பு) ஆர்.பாலாஜி, நகரப் பொறியாளர் சிவபாதம், துவாக்குடி நகரமன்ற தலைவர் காயம்பு. துவாக்குடி நகராட்சி இ.பட்டுசாமி, திருவெறும்பூர் வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், ஆணையர் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
telegram ஆப் மூலம் அறிய
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments