Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தனியார் கல்லூரி மாணவி மர்ம மரணம் – திருச்சியில் பரபரப்பு!

Advertisement

அரியலூர் மாவட்டம் கருப்பூர் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த ராமையன் மகள் ராஜேஸ்வரி. இவர் திருச்சி சமயபுரம் அருகே உள்ள தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

Advertisement

திடீரென நேற்று இரவு விடுதி வளாகத்தில் மர்மமான முறையில் முகத்தில் காயங்களுடன் மாணவி இறந்து கிடத்துள்ளார். இது குறித்து தகவலறிந்த சமயபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமயபுரம் காவல் நிலையில் புகார் கொடுத்தும் காவல்துறை விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என உறவினர்கள் தெரிவித்து, எங்களுக்கு நீதி வேண்டும் என்று சமயபுரம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *