திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் திருஅத்யயன வைகுந்த ஏகாதேசி பெருவிழா பகல் பத்து மூன்றாம் திருநாள் அரங்கன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் பகல் பத்து 3ஆம் நாள் நாச்சியார் திருமொழிக்காக நம்பெருமாள் –
மாம்பழ நிற பட்டு அணிந்து அஜந்தா சௌரிக் கொண்டை அணிந்து கலிங்கத்துராய் கல் இழைத்த ஒட்டியாணம் கீரடத்தில் நெற்றி கட்டாக அணிந்து, வைர அபய ஹஸ்தம், கல் இழைத்த கோலக் கிளி மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை,
6 வட முத்து சரம் பின்புறம் அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி, திருக் கைகளில் தாயத்து சரம், ரத்தின திருவடி அணிந்து புறப்பாடு கண்டுருளினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments