Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை!! திருச்சியில் பயங்கரம்!!

திருச்சி அதவத்தூர் பாளையம் அருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து சோமரசன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி கங்காதேவி. இவரை முட்புதருக்குள் எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சம்பவ இடத்தில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முட்புதரில் வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *