Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே நாட்டு துப்பாக்கி வைத்து மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி தமிழசன் கைது

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி தமிழ் என்கின்ற தமிழரசன் (40). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் இது 35 வழக்குகள் உள்ளன. 

இந்நிலையில் ரவுடி தமிழரசன் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் துப்பாக்கி வைத்துக் கொண்டு அவ்வழியாக வருபவர்களை மிரட்டி வழிபறியில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதனடிப்படையில் அங்கு வந்த போலீசார் தமிழரசனை போலீசாரை பார்த்து சுட்டு விடுவேன் என மிரட்டியதால் போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். 

தொடர்ந்து ரவுடி தமிழரசன் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *