Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கேட்பாரற்றுக் கிடந்த பையில் ஒரு கோடி மதிப்புள்ள தங்கம்

இலங்கையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலைய வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகளின் சோதனை நடத்தி கொண்டிருப்பதைக் கண்ட ஒரு பயணி, பயத்தில் தான் கொண்டு வந்த பையை கழிவறைக்கு அருகே போட்டு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து கழிவறை சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் கேட்பாரற்று கிடந்த பை குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் அந்தப் பையை கைப்பற்றி சோதனை நடத்தினர். அதில் தங்கத்தை பேஸ்டுகளாக மாற்றி கடத்தி வந்து, அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து கழிவறை அருகே யாரோ ஒரு பயணி விட்டு சென்றிருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இந்த பையை கொண்டு வந்த பயணி யார் என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கவரில் ஒரு கிலோ 56 கிராம் தங்க இருந்துள்ளது. இதன் மதிப்பு ஒரு கோடியே மூன்று லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

 https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *