Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி அறிவிப்பு

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் கரூர் மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் வரும் (20.06.2023) செவ்வாய்கிழமை காலை 10:30 மணி அளவில் தோகைமலை வட்டாரம் புழுதேரியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் இலாபகரமான தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். 

இப்பயிற்சியில் தென்னை நாற்றங்கால் தொழில்நுட்பம், பிஞ்சு உதிர்வதை தடுத்தல், ஒருங்கிணைந்த உரம், நீர் மேலாண்மை, பூச்சி, நோய் மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்படும். 

எனவே விவசாயிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் முன் பதிவு செய்ய 9566520813, 8667882566 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் முன் பதிவு அவசியம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *